இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு(சண்டிலிப்பாய்) பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்திற்கு உட்பட்டது மானிப்பாய் பிரதேசம். யாழ் நகரத்தத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மானிப்பாய் பிரதேசத்தில் பல சைவத்திருக்கோயில்கள் காட்சி தருகின்றன.இவற்றுள் ஒன்றுதான் வேலைக்கைப் பிள்ளையார் ஆலயம். மானிப்பாய் தெற்கு லோட்டன் வீதியில்,139 ஆம் இலக்க கிராம சேவை அலுவலர் பிரிவில் இந்த ஆலயம் உள்ளது.
150 வருடங்களுக்கும் மேலான வரலாற்றுப் பெருமை கொண்டதாக விளங்குகிறது வேலைக்கைப் பிள்ளையார் ஆலயம். இங்கு பிள்ளையார் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டுவருகின்ற போதிலும், ஆலயத்தில் முருகப்பெருமானே மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.